கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சா மீட்பு:ஒருவர் கைது..!

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சா மீட்பு:ஒருவர் கைது..!

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின் வீட்டொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சா மீட்பு:ஒருவர் கைது(Photos) | Ganja Recovery In Kilinochchi Suspect Arrested

இதனையடுத்து நேற்று இரவு சோதனை மேற்கொண்ட பொலிஸார் 47 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், சான்று பொருட்களையும், சந்தேக நபரையும் மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.