இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள மற்றுமொரு வரி..!

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள மற்றுமொரு வரி..!

இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் யோசனைகளை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்காகவே இந்த வரி விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள மற்றுமொரு வரி | New Tax In Srilanka

அதன்படி, நாடு முழுவதும் உள்ள நிலத்தின் மதிப்பை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பல்வேறு வகைகளின் கீழ் இந்த வரியை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இருப்பினும் இந்த வரியை விதிக்கும் முறை குறித்து தற்போது வரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.