இரத்தினபுரியில் வீடொன்றில் பாரிய தீ விபத்து: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

இரத்தினபுரியில் வீடொன்றில் பாரிய தீ விபத்து: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

இரத்தினபுரி பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நேற்று (02-11-2023) வீடொன்று தீப்பிடித்ததாக இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து இரத்தினபுரி தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் வீடொன்றில் பாரிய தீ விபத்து: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | One Person Died In House Fire In Ratnapura

இரத்தினபுரி பகுதியில் உள்ள மல்வல வீதியில் அமைந்துள்ள இடத்திற்கு அவர்கள் வந்தடைந்தபோது, ​​இறந்தவர் இருந்த வீட்டின் இரண்டு அறைகள் ஏற்கனவே தீயில் எரிந்து சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, ​​தீக்காயம் அடைந்தவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து தனியாக வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.