பெண் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை..!

பெண் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை..!

இரத்தினபுரி இன்னகந்த பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்று பெண் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி தரையில் விழுந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அயகம பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காயமடைந்தவர் பொலிஸ் அதிகாரிகளினால் அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அயகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய இனகந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.

பெண் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை | Women Kills Husband Police Investigation

குடும்ப தகராறு காரணமாக தகாத உறவில் இருந்த கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.