முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் வீட்டில் மின்சாரம் தாக்கி 69 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று(27.10.2023) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுடன் காணப்படும் வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக நீர் பம்பிக்கு மின்சாரம் இணைப்பினை வழங்கும்போதே இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி | One Person Dies Due Electric Shock In Mullaitivu