ஆசிரியரின் அநாகரிக செயல்:கொதித்தெழுந்த பெற்றோர்
பண்டாரவளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியரை பெற்றோர் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்ததாக தெரியவருகிறது.
குறித்த ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசியில் ஏனைய ஆபாச காணொளிகள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.