பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (27) வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று(26) வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.