பெண்களின் தகாத புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய சுகாதார உதவியாளர்
பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந் நபர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் பதுளை கந்தகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய சுகாதார உதவியாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.