ஜூன் 16 தொடக்கம் 90,862 பேர் கைது!

ஜூன் 16 தொடக்கம் 90,862 பேர் கைது!

கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி முதல் இன்று (23) வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 90 ஆயிரத்து 862 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 17 ஆயிரத்து 913 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுகளில் 33 ஆயிரத்து 269 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 11 ஆயிரத்து 480 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 ஆயிரத்து 229 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 662 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 184 பேரும், வெடிபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 18 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 ஆயிரத்து 107 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்புகளின்போது ரி 56 வகை துப்பாக்கிகள் 13, ரி 81 வகை துப்பாக்கி 01, 12 துளை கொண்ட துப்பாக்கிகள் 51, கைத்துப்பாக்கிகள் 05, நாட்டுத் துப்பாக்கிகள் 29, ரீபீட்டர் வகை துப்பாக்கிகள் 92, ரிவோல்வர் வகை துப்பாக்கிகள் 02 மற்றும் ஏனைய வகையான துப்பாக்கிகள் 02, தோட்டாக்கள் 1,749, வாள்கள் 11, கத்திகள் 07 ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.