
இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்:வங்கி கணக்கில் திடீரென வந்து குவிந்த 92 கோடி.
வட அயர்லாந்தை சேர்ந்த டேல் கில்லெஸ்பி என்ற 18 வயது இளைஞனின் வங்கி கணக்கில் திடீரென 92 கோடி பணம் வைப்புச் செய்யப்பட்டதால் அவர் இன்ப அதிர்ச்சியில் திகழ்ந்துள்ளார்.
வங்கியின் தவறால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பின்னர் தெரியவந்தது.
இவ்வாறான சம்பவத்தின் மூலம் தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் கிடைக்கும் என்று அவர் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்.
தன்னுடைய கணக்கில் உள்ள காசு தொகையை சோதனை செய்து பார்க்கும் போது தான் இவ்வளவு பெரிய தொகை தன்னுடைய வங்கி கணக்கில் இருப்பதே அவருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் டேல் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர். எனினும் இளைஞன் மற்றும் அவனது குடும்பத்தினரது மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
உடனடியாக தன்னுடைய தவறை உணர்ந்து கொண்ட வங்கி சரியான நடவடிக்கைகளின் மூலம் டேலின் வங்கி கணக்கில் சரியான அளவு பணத்தை செலுத்தி அனைத்தையும் சரி செய்துள்ளது.
ஆனாலும் கூட வாழ்நாள் முழுவதும் கூறுவதற்கு தன்னுடைய மகனுக்கு ஒரு கதை கிடைத்து விட்டதாக அவரின் தாயார் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.