நல்லூர் தேரில் 2 பேர் இருக்க! கொக்கட்டிச்சோலை தேரில் மட்டும் ஏன் இத்தனை பேர்...
கொக்கட்டிச்சோலை தேரில் மாத்திரம் ஏன் இவ்வளவு பேர் ஏறி இருக்கிறார்கள் என்பது புரியவில்லை, பூசகர் மற்றும் உதவியாளர் தவிர மற்றவர்கள் எதற்கு தேரில் ஏதும் ஐதீகமா?
தேர் மணலில் ஓடுகிறது ஒரு பெரும் வரும், அப்படி இருக்க ஏன் இவர்கள் ஏற வேண்டும்.

மட்டக்களப்பு தான்தோன்றி அப்பனுடைய தேரை களங்கப்படுத்துவது ஆலய நிருவாகம் என்பது தெளிவாக தெரிகிறது.
யாழ் நல்லூர் முருகனின் தேரை ஆலய நிருவாகம் எவ்வளவு அழகாக ஒழுங்கமைத்திருக்கிறது.
2024ம் ஆண்டில் திருந்துமா கொக்கட்டிச்சோலை தான்தோன்றி அப்பனுடைய ஆலய நிருவாகம், அல்லது தொடர்ந்து இதே விளையாட்டு தொடருமா என முகநூலில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

