கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்: ரயிலில் இருந்து விழுந்த ஒருவருக்கு நேர்ந்த சோகம்.

கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்: ரயிலில் இருந்து விழுந்த ஒருவருக்கு நேர்ந்த சோகம்.

கொழும்பு பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில்  பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்: ரயிலில் இருந்து விழுந்த ஒருவருக்கு நேர்ந்த சோகம் | Person Die After Falling From Moving Train Colombo

குறித்த சம்பவத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்: ரயிலில் இருந்து விழுந்த ஒருவருக்கு நேர்ந்த சோகம் | Person Die After Falling From Moving Train Colombo

இதேவேளை, உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.  

உயிரிழந்த நபர் ரயிலில் இருந்து குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.