சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சை தரங்களில் மாற்றம்.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகள் நடத்தப்படும் தரங்களில் மாற்றம் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது.
அதற்கமைய , சாதாரண தர பரீட்சையை தரம் 10 இலும், உயர் தர பரீட்சையை தரம் 12 இலும் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.