சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும்: விவசாய அமைச்சர்..!
மழையினால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விசாய அமைச்சர் பல பிரதேசங்களுக்கு மழையினால் சேதமடைந்த வயல்களை பார்வையிடச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் அறுவடை செய்யக்கூடிய நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, வறட்சி மற்றும் மழையினால் பயிர் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, அதிகாரிகள் இது தொடர்பான தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.