தாய்,தந்தையற்ற 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு..!

தாய்,தந்தையற்ற 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு..!

பெற்றோர் இன்றி தனது பாட்டியுடன் வசித்து வந்த 15 வயதான சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் 17 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் 10 ஆம் தரத்தில் படித்து வரும் தனது பேத்தி காணாமல் போயுள்ளதாகவும், அவர் லுனுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருப்பதாகவும் 71 வயதான பாட்டி, காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து சிறுமி மீட்கப்பட்டதுடன்  தெமட்டபிட்டிய, லுனுவில பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வர்ணப்பூச்சாளராக தொழில் செய்து வந்துள்ளார்.

தாய்,தந்தையற்ற 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு | A 15 Year Old Girl Was Sexually Assaulted

சந்தேகநபர் தன்னுடன் காதல் உறவைப் பேணி வருவதாகவும், கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் கட்டுனேரியாவில் உள்ள தனது இல்லத்தில் தம்முடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாகவும் சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைக்கான ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக குறித்த சிறுமி தனது காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். மாரவில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தாய்,தந்தையற்ற 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு | A 15 Year Old Girl Was Sexually Assaulted