நீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழப்பு.

நீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழப்பு.

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (25.08.2023) மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிட்ட கொண்டிருந்தபோது சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் தேடியுள்ளனர்.

நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே உயிரிழந்துள்ளது.

நீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழப்பு (Photos) | Girl Baby Died After Falling Into Water Tankஇதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழுந்துள்ளமை கண்டறியப்பட்டது.

உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் குழந்தை முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தசம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGallery