
கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுமி மரணம்!
மாத்தறை - கம்புறுபிட்டிய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (16.08.2023) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி முன்பள்ளிக்குச் செல்வதற்காகக் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காகக் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் வாக்குமூலங்களைப் பெற்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.