நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரற்ற காலநிலை நிலவும்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரற்ற காலநிலை நிலவும்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (06) சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை, மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரற்ற காலநிலை நிலவும்! | Today Weather Update In Srilanka

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது