யானை தாக்கி ஒரே நாளில் 3 ஆண்கள் பரிதாப மரணம்.

யானை தாக்கி ஒரே நாளில் 3 ஆண்கள் பரிதாப மரணம்.

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி மூவர் மரணமடைந்துள்ளனர்.

மொனராகலை, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் குறித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை - மெதகமை பகுதியில்  (28.07.2023) பிற்பகல் காட்டு யானை தாக்கி 58 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

யானை தாக்கி ஒரே நாளில் 3 ஆண்கள் பரிதாப மரணம் | Three Men Death Course Of Elephant Attaks

குறித்த நபர் வயல் வேலைக்குச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு இலக்கானார் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மெதகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொலனறுவை - மெதிரிகிரிய புதிய நகரத்தில் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 28.07.2023 அதிகாலை வீட்டின் வந்த 72 வயதான நபரை யானை தாக்கியது என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மெதிரிகிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானை தாக்கி ஒரே நாளில் 3 ஆண்கள் பரிதாப மரணம் | Three Men Death Course Of Elephant Attaksஇதேவேளை, அநுராதபுரம் - மஹவ பகுதியில் காட்டு யானை தாக்கி 43 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதிக்குள் 28.07.2023 அதிகாலை நுழைந்த யானையை விரட்டுவதற்கு முற்பட்டபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மஹவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.