கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

 கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை - பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்தே குறித்த சடலம் இன்று (27) மீட்கப்பட்டுள்ளது.

கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு! | Rescue Of The Man S Body From The Canalசுமார் 20 - 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞரின் சடலமே கால்வாயில் மிதந்து வந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.