காணாமல் போன மற்றுமொரு தமிழ் தாயும் குழந்தையும் - பொலிஸார் வெளியிட்ட தகவல்.

காணாமல் போன மற்றுமொரு தமிழ் தாயும் குழந்தையும் - பொலிஸார் வெளியிட்ட தகவல்.

ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் கடந்த 17 நாட்களாக தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

22 இரண்டு வயதான வெள்ளையம்மா சுரேந்திரனி ராணி மற்றும் அவரது ஒரு வயது ஏழு மாத மகள் தருஷிகா அபி ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன மற்றுமொரு தமிழ் தாயும் குழந்தையும் - பொலிஸார் வெளியிட்ட தகவல் | Tamil Mother And Child Missing In Sri Lanka

கடந்த 17ஆம் திகதி சுகயீனத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு தனது குழந்தையுடன் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என அவரது கணவர் மோகனசுந்தரம் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி பேருந்தில் ரிக்கிலகஸ்கட நகருக்குச் சென்றதாகவும், ஊரில் அவர்களை பார்த்ததாகவும் பலர் தன்னிடம் கூறியதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன மற்றுமொரு தமிழ் தாயும் குழந்தையும் - பொலிஸார் வெளியிட்ட தகவல் | Tamil Mother And Child Missing In Sri Lanka

இந்த நிலையில் அந்த பெண் மற்றும் குழந்தையை தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.