வவுனியாவில் 15 வயது சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்! அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது..!

வவுனியாவில் 15 வயது சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்! அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது..!

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

வவுனியாவில் 15 வயது சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்! அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது | Government Officer Arrested In Vavuniaகுறித்த நபர் வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவனை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து வன்கொடுமை செய்ததாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் இன்று (20.07.2023)  கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் 15 வயது சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்! அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது | Government Officer Arrested In Vavunia

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதிளையச் சேர்ந்த 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.