குழு மோதலில் 2 பேர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை..!

குழு மோதலில் 2 பேர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை..!

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி - கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (18.07.2023) இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலின் போது ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 28 வயதுடைய இளைஞரும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.