காலையில் நடந்த கோர விபத்து - யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தவர் பரிதாபமாக பலி..!

காலையில் நடந்த கோர விபத்து - யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தவர் பரிதாபமாக பலி..!

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்து பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

காலையில் நடந்த கோர விபத்து - யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தவர் பரிதாபமாக பலி | Jaffna Accident Today One Person Death

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முள்ளியவளை பகுதியை 39 வயதான நபர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.