மனைவியுடன் தகராறு - 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை!

மனைவியுடன் தகராறு - 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறினால், தனது 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டம் சாகாட் கிராமத்தைச் சேர்ந்தவர் நபர் ஒருவர், தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், அவரது மனைவி தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

குறித்த நபர் அங்கு சென்று மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இருப்பினும், மனைவி அவருடன் செல்ல மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கணவர், யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் விஷத்தை கலந்து தனது 6 வயது மகளுக்கு ஊட்டியுள்ளார்.

அதனை சாப்பிட்டதும் அச்சிறுமி வாந்தி எடுத்துள்ளதுடன், இதனைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், இரண்டாவது மகளுக்கும் குறித்த நபர் சாப்பாடு ஊட்ட செல்லும்போது, உறவினர்கள் அதனை தடுத்துள்ளனர்.

அவரும் குறித்த உணவை சாப்பிட்டதால் தந்தை, மகள் இருவரும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவரது தந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.