மின்சார கட்டணத்தை 20% குறைக்குமாறு கோரிக்கை!
மின்சார கட்டணத்தை 20% குறைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிக்கையொன்றின் ஊடாக இதனைக் கோரியுள்ளார்.

இலங்கையில் குறைந்துள்ள மின்சாரத் தேவை மற்றும் எரிபொருள் விலைக் குறைப்பு காரணமாக நுகர்வோர் உடனடியாக மின்சாரக் கட்டணக் குறைப்பைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.