வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற இலங்கை பெண் உயிரிழப்பு - சந்தேகநபர் கைது...!
குவைத்திற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அந் நாட்டு பிரஜையான 21 வயதுடைய இளைஞன் ஒருவர் முறையற்ற விதத்தில் வாகனத்தை செலுத்தியதால் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 59 வயதுடைய இலங்கை பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவ் விபத்திற்கு காரணமான இளைஞன் தைமா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026