ஆரம்பபிரிவு மாணவர்களின் வாக்குவாதம் கழுத்தை பதம்பார்த்தது...

ஆரம்பபிரிவு மாணவர்களின் வாக்குவாதம் கழுத்தை பதம்பார்த்தது...

ஆரம்ப பிரிவு மாணவர்களிடையே இடம்பெற்ற வாக்குவாதம் இறுதியில் மாணவன் ஒருவனின் கழுத்தை பதம் பார்க்கும் வகையில் மோதலாக வெடித்துள்ளது.

இந்த சம்பவம் பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையே பாடசாலை தொடங்கியதும்  வகுப்பறையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது ​​புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஊசியை மாணவர் ஒருவர் மற்ற மாணவரின் கழுத்தில் ஆழமாக குத்தியுள்ளார். இதனால் குறித்த மாணவன் வலியால் அலறி துடித்த நிலையில், பாடசாலை அதிபர் மற்றுமொரு ஆசிரியரின் உதவியுடன் மாணவனை மோட்டார் சைக்கிளில் பொல்பெத்திகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பொல்பெத்திகம வைத்தியசாலையில் ஊசியை அகற்றுவதற்கு வசதிகள் இல்லாததால் மாணவன் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மூன்றரை மணித்தியாலங்களின் பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டது.

இதையடுத்து குறித்த மாணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.