கொத்துக் கொத்தாக பலியான மக்கள்..! சோகத்தில் தென் அமெரிக்கா...

கொத்துக் கொத்தாக பலியான மக்கள்..! சோகத்தில் தென் அமெரிக்கா...

தென் அமெரிக்க நாடான ஈகுவேடரில் சிம்பரொசா மாகாணம் கன்டோன் நகரின் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி முதலில் 16 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும், தற்போது பலி எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.