நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை மரணம்!

நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை மரணம்!

ஹுங்கம - கஹந்தமோதர,  முகத்துவாரம் பகுதியில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹுங்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கஹந்தமோதர முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் பயணித்த மூன்று ரஷ்யர்களில் ஒருவர் முகத்துவாரத்தில் இறங்கிய பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக விடுதி ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்ய பிரஜையான செர்பினன் பெட்ஸி என்ற 44 வயதுடைய நபரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இந்த ரஷ்ய நாட்டவர் கஹந்தமோதர பிரதேசத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தனது சகோதரனுடனும் மற்றுமொரு ரஷ்ய பெண்ணுடனும் கடற்கரையில் நடந்து சென்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.