எதிர்பாராத விதமாக உயிரிழந்த குழந்தை

எதிர்பாராத விதமாக உயிரிழந்த குழந்தை

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சபீசன் கென்சியால் எனும் ஒன்றரை வயது பெண்குழந்தையே உயிரிழந்துள்ளது.

பெற்றோர் வீட்டில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை, விளையாடிக்கொண்டு இருந்து குழந்தையை திடீரென காணதமையால், பெற்றோர் தேடிய வேளை குழந்தை குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த நிலையில் கண்டுள்ளனர்.

உடனே குழந்தையை மீட்டு, ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு குழந்தை அனுப்பப்பட்டது.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (6) உயிரிழந்துள்ளது.