கடற்றொழில் மேற்கொள்ள சென்றவர் பலி

கடற்றொழில் மேற்கொள்ள சென்றவர் பலி

யாழ்ப்பாணம் குருநகரில் நேற்று (15) இரவு கடற்றொழில் மேற்கொள்ள சென்றவர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குருநகரைச் சேர்ந்த 40 வயதுடைய அலோசியஸ் ஜான்சன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

மீன் பிடிப்பதற்காக கடலில் இறங்கிய குறித்த நபர் வலை வீசி மீன்பிடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரைக் காணவில்லை என்று தேடிப்பார்த்தபொழுது நீருள் மூழ்கி சடலமாக காணப்பட்டுள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.