
பாணுக்குள் குண்டு ஊசிகள்! (படங்கள்)
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் இன்று வாங்கப்பட்ட பாணுக்குள் இருந்து 3 குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன.
அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை, குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார்.
அந்த பாணை கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய போதே, பாண் ஒன்றினுள் 3 குண்டு ஊசிகள் காணப்பட்டுள்ளன.
அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.