மின்னல் தாக்கி இளைஞன் பலி

மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் (06) காலை உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்ற வேளை தோட்ட பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை காங்கேசன்துறை பகுதிகளில் இன்று காலை திடீரென கடும் மழை இடி மின்னலுடன் பெய்திருந்தது.

அவ்வேளையிலையே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.