ஓடிக்கொலேன் குடித்து குடும்பஸ்தர் பலி

ஓடிக்கொலேன் குடித்து குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணத்தில் போதைக்காக ஓடிக்கொலேன் குடித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மயங்கிய நிலையில் காணப்பட்டவரை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையின் போது, குறித்த நபர் போதைக்காக ஓடிக்கோலனை அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வைத்திய பரிசோதனையின் போது இருதய நோயினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.