இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு!

இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு!

குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் செய்திகள் அவதானித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவையாகும்.

இவ்வாறான செய்திகளை மறுக்கும் அதேவேளை, வன்மையாக கண்டிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.