அம்பிகை அருள் தரும் ‘ஆடி வெள்ளி’ விரதம்

அம்பிகை அருள் தரும் ‘ஆடி வெள்ளி’ விரதம்

ஆடி மாதத்தில், அம்பிகையை நோக்கி விரதம் இருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக் கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும்.

கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது. காரணம் ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஆலயங்களில் விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபடுவது வழக்கம். விளக்கு இருக்கும் இடமெல்லாம் ஒளியிருப்பதுபோல விளக்கு வைத்து ஜோதியை வழி படுவதன் மூலம் ஒளிமயமான எதிர்காலம் நமக்கு அமையும்.

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில், அம்பிகையை நோக்கி விரதம் இருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக் கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபட்டால் வெற்றிகள் குவியும், வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு.