பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து நபர் பலி!
மஹவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுவேரிய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.