கோடி கோடியாய் அள்ளிக்கொடுக்கப்போகும் சனிபகவான்.. எந்த ராசிக்கு தெரியுமா?
சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை ரிஷப ராசியில் பத்தாம் வீட்டில் அமர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு, தொழில், திருமணம், வேலைவாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.
ரிஷப ராசியினரை பொறுத்தவரை சனி பகவான் இருக்கும் இடம் பத்தாம் வீடு என்றாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு 12ம் வீடு, 4ம் வீடு, 7ம் வீடுகளின் மீது விழுகிறது.
விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானங்களின் மீது சனிபகவான் பார்வை விழுவதால் அதற்கேற்ப இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.
இதனால், தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் உடல் நலத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக முதுகு வலி ஏற்படும் கவனம் தேவை. ராகு கேது பெயர்ச்சியும் அற்புதமாக உள்ளது.
செய்யும் தொழிலில் வருமானம் கூடும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பாக்கெட்டில் பணம் அதிகரிக்கும். பணப்புழக்கம் சற்று தாராளமாக இருந்து வரும்.
தேவையான விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடந்தேறும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.