லிட்ரோ நிறுவனம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயு ஏற்றி வரும் கப்பல் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயுவுடன் மேலும் ஒரு கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயு தொகையை ஹோட்டல்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவை வழங்குனர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.