கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர் வெட்டு..!

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர் வெட்டு..!

நிலத்தடி நீர் வழங்கும் குளாயின் திருத்தப்பணிகள் காரணமாக நாளை மறுதினம் கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமல்ப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நிர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை மறுதினம் காலை 08 மணி முதல் மாலை 06 மணிவரையான 10 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு 13,14 மற்றும் கொழும்பு 15 அகிய பகுதிக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 11,12 ஆகிய பகுதிகளக்கு குறை அழத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.