
மீண்டும் அத்துமீறல் - 16 மீனவர்கள் கைது
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் மூன்று படகுகளுடன் நேற்றைய தினம் (07) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.