கொரோனாவால் விமான சேவை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

கொரோனாவால் விமான சேவை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ஸ்ரீலங்காவின் விமான சேவை நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்திற்குள் கொரோனா பரவுவதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் அதில் ஒரு கட்டமாக பணிக்கு அழைக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், 

கொரோனா வைரஸ் பரவினால் விமான நிலையத்திற்கு பெரிய பிரச்சினை ஏற்படும். இதனால், இதற்கு முன்னர் அரசாங்கம் அறிவித்திருந்தமைக்கு அமைய ஊழியர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்க மீண்டும் தீர்மானித்துள்ளோம்.

15 ஆம் திகதி முதல் சாதாரண பயணிகள் விமானங்கள் வருவதில்லை. விமானங்கள் வராமல் ஊழியர்களை பணிக்கு அழைப்பதில் பயனில்லை.

இதனால், பயணிகள் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரை குறைவான ஊழியர்களை சேவைக்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.