
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு!
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் மத்தி பகுதியில் சிறுவன் ஒருவன் நேற்று (08) விளையாடிக்கொண்டிருந்த வேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை திடீரென குறித்த சிறுவன் கட்டடத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக, குறித்த சிறுவன் மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட், அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில், 11 வயதான ஜெயச்சந்திரன் தஜிதரன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.