பேருந்துகளில் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்

பேருந்துகளில் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்

தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பேருந்துகளில் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

பேருந்து சேவைகளை ஆரோக்கியமான முறையில் முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர்  தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  நாடளாவிய ரீதியில் ரயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் ரயில்களில் தொற்று நீக்கம் செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.