எங்களுடைய உரிமைகுரல் நசுக்கப்பட்டிருக்கின்றது

எங்களுடைய உரிமைகுரல் நசுக்கப்பட்டிருக்கின்றது

இன்றைய பாராளுமன்ற அமர்வில் மலையக மக்களின் சார்பாக குரல் எழுப்ப இருந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய உரிமைகுரல் நசுக்கப்பட்டிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்றைய பாராளுமன்றத்தில் அதிமுக்கிய அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவிக்க இருந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய ஜனநாயக உரிமை மீறி ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தாக்க முற்பட்டதன் விளைவாக நானும் என்னுடைய சக பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.

இன்றைய தொழில் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பெருந்தோட்ட மலையக மக்கள் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதால் இன்றைய விலைவாசிக்கேற்ப்ப அவர்களுடைய நாளாந்த வேதனம் 2,500 ரூபாய் ஆக உயர்த்தப்பட வேண்டும் உடனடியாக சம்பள நிர்ணய சபை ஒன்று கூட வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன் வைக்க இருந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய பேச்சுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது .

பாராளுமன்றத்திற்குள் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் நாட்டு மக்களுக்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற பாரியதொரு கேள்வி எம் மத்தியில் நிலவுகின்றது வாழ்க்கை செலவு அதிகரித்து வருகின்றது அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இன்று பேச்சுரிமையும் மறுக்கப்பட்டிருக்கிறது என அவர் கருத்து தெரிவித்தார்.