
T-56 ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது
திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தில் T-56 ரக துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் - சூரியபுர விஷேட காவல்துறை அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.