மேல் மாகாணத்தில் நீண்ட காலமாக வசிக்கும் 37 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன

மேல் மாகாணத்தில் நீண்ட காலமாக வசிக்கும் 37 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 37 வீடுகளில் நீண்ட காலமாக தங்கியிருந்தவர்களுக்கு, காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு தேசிய வீடமைப்பு அதிகார சபையில் நேற்று (25) இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் துமிந்த சில்வா ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.