வாழைச்சேனையில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

வாழைச்சேனையில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை காவல்துறை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, மண் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட கனரக மற்றும் உழவு இயந்திரங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

வாழைச்சேனை காவல்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட வடமுனை மற்றும் ரிதிதென்னை ஆகிய பகுதிகளில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.