மிதப்பு பால உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை, கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய இருவரும், அதன் உரிமையாளரும் இன்று (24) கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.